Saturday, December 5, 2009

ஓர் அறிமுகம்

புகைப்படக்கலையில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்ட பல்லாயிரக்கணக்கானவர்களுள் நானும் ஒருவன். அதற்காக என்னை ஒரு சிறந்த புகைப்பட கலைஞன் என்று எண்ணிவிட வேண்டாம். உங்களில் பலரைப்போல கையில் கமெராவுடன் அலையும் ஒரு சாதாரண புகைப்பட ஆர்வலன். சிறந்த புகைப்படங்கள் எடுப்பது எப்படி என்பது தொடர்பான எனது முயற்சிகளையும் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதே இந்த வலைப்பதிவின் நோக்கம்.

புகைப்படக்கலை என்பது எல்லைகள் அற்ற ஒரு துறையாகும். மேலும் அது ஒளியைக் கையாளும் விஞ்ஞானமாகும். நாம் எல்லோரும் எண்ணுவதுபோல புகைப்படக்கலை சிக்கலானதோ அல்லது எளிமையானதோ அல்ல.

இந்த வலைப்பதிவின் மூலம் புகைப்படக்கலை (Photography) மற்றும்  புகைப்படக்கருவி (Camera) பற்றிய எனது அனுபவங்களையும் தேடல்களையும் வரும் பதிவுகளில் பகிர்ந்துகொள்கிறேன்.


4 comments: